கலெக்டர் அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய நீதி மன்றம் உத்தரவு
திருவண்ணாமலை: அரசுக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு நிலுவை தொகை வழங்காததால், திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை தண்டராம்பட்டு சாலையில், தாமரை நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளது.
இந்த குடியிருப்பு, 1987-88 -ம் ஆண்டில் கட்டப்பட்டது. அதற்காக, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், வருவாய்த் துறை மூலம் 20 ஏக்கர் பட்டா நிலத்தை கையகப்படுத்தியது.
ஆனால் அந்த நிலத்துக்கு மிகக்குறைவான விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இதை நிலத்தின் உரிமையாளர்கள் ஏற்கவில்லை. தங்கள் நிலத்திற்கு உரிய விலை வேண்டி திருவண்ணாமலை நீதி மன்றத்தில் பாதிக்கப்பட்டவர்கள் வழக்குத் தொடர்ந்தனர்.
இதை ஏற்றுக் கொண்ட நீதி மன்றம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிலத்திற்கு சதுர அடிக்கு 12 ரூபாய் விலை வழங்க கோர்ட் உத்தரவிட்டது.
ஆனால், அதை ஏற்க வீட்டு வசதி வாரியம் மறுத்து சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தது.
வழக்கை விசாரித்த ஐகோர்ட்டும், சதுர அடிக்கு 12 ரூபாய் விலை வழங்குவதை உறுதி செய்தது. இதன் பின்பு , சுப்ரீம் கோர்ட்டில் வீட்டு வசதி வாரியம் மூலம் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஐகோர்ட்டின் தீர்ப்பை சுப்ரீம்
கோர்ட்டும் உறுதி செய்தது.
கோர்ட் தீர்ப்பு வெளியாகி ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் நிலத்தின் உரிமையாளர்ளுக்கு இதுவரை நிலுவை தொகை வழங்கப்படவில்லை.
இதனால், பாதிக்கப்பட்ட திருவண்ணாமலையை சேர்ந்த முகமது அலி, முகமது கவுஸ், ஆகியோர் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த கோரி வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த சார்பு நீதிமன்ற நீதிபதி சாம்பசிவம், வீட்டு வசதி வாரியத்துக்கு நிலத்தை கையகப்படுத்தி கொடுத்த வருவாய் துறையை சார்ந்த
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக தளவாட பொருட்களையும், ஆர்.டி.ஓ., அலுவலக
தளவாட பொருட்களையும், காரையும் ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.
-
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல்












Click it and Unblock the Notifications