திமுகவுடன் கூட்டணி இல்லை-பிரகாஷ் காரத்
டெல்லி: லோக்சபா தேர்தல் தோல்விக்கு தானே பொறுப்பேற்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தல் தோல்வி குறித்து ஆராய சிபிஎம் கட்சியின் 2 நாள் மத்திய கமிட்டிக் கூட்டம் டெல்லியில் நடந்தது. நேற்று இக்கூட்டம் முடிவடைந்தது.
கூட்டத்திற்குப் பின்னர் பிரகாஷ் காரத் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
அணுசக்தி ஒப்பந்தம் காரணமாக, மத்திய அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றது குறித்து கட்சி தலைவர்களிடையே பல்வேறு கருத்துகள் எழுந்தன. எனினும், ஏறத்தாழ ஒருமித்த ஆதரவு கிடைத்தது.
அதே நேரத்தில், முன்னதாகவே ஆதரவை வாபஸ் பெற்றிருக்கலாம் என்று சிலர் கூறினர். ஆதரவை வாபஸ் பெறுவதை தவிர வேறு வழி எதுவும் எங்களுக்கு இல்லை.
மத்திய அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றது சரியான மற்றும் அவசியமான முடிவு என்று மத்திய கமிட்டி உறுதி செய்துள்ளது. அமெரிக்காவுக்கு எதிரான இடதுசாரிகளின் நிலைப்பாட்டை அந்த முடிவு உறுதி செய்கிறது.
மத்தியில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க அல்லாத ஒரு மாற்று அரசை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டது, சரியான முடிவு. ஆனால், தேசிய அளவில் விரிவான மற்றும் நம்பகத்தன்மையுடன் கூடிய மாற்று அணியை உருவாக்க தவறி விட்டோம்.
மேற்கு வங்காளம் மற்றும் கேரளாவில் கட்சிக்குள் ஏற்பட்ட தவறான செயல்களால் தேர்தலில் தோல்வி ஏற்பட்டது. அது குறித்து பொலிட்பீரோ கூட்டத்தில் விவாதித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இடதுசாரிகள் அமைப்பை வலுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும். காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. அல்லாத கட்சிகளுடன் தொடர்ந்து நல்லுறவை பேணி காப்போம். மூன்றாவது அணியை வலுப்படுத்த முயற்சிகள் தொடரும்.
திமுக உள்பட காங்கிரஸ் கூட்டணியில் உள்ள எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்க மாட்டோம்.
கட்சியின் பொதுச் செயலாளர் என்ற முறையிலும், மத்திய கமிட்டியின் முடிவுகளை அமல்படுத்தியவன் என்ற முறையிலும் தேர்தல் தோல்விக்கு நான் பொறுப்பேற்கிறேன். கட்சியின் மத்திய கமிட்டியுடன் சேர்ந்து நானும் பொறுப்பேற்கிறேன் என்றார் காரத்.
-
ரூ 30,00,00,00,00,000 கோடி பஸ்பம்.. கதறும் இந்திய முதலீட்டாளர்கள்.. ஒவ்வொரு நாளும் மரண அடி -
இஸ்ரேலால் இந்திய அடுப்புகளுக்கு ஆப்பு? கேஸ் சிலிண்டர் விலை உயர்வு வெறும் டிரைலர் தானா? என்னாகும்? -
இன்றைய டாப் 10 பேச்சுக்கள் 09/03/2026: ஸ்டாலின் முதல் சீமான் வரை கூறிய நச் கருத்துகள் -
ஒரே நாளில் ரூ.17 லட்சம் உயர்ந்த பரிசு தொகை! இந்திய டீமுக்கு ஜாக்பாட்! எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications