ஏர் பிரான்ஸ் கருப்புப் பெட்டி 'சிக்னல்' கிடைத்தது!

கடந்த 1ம் தேதி பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரிலிருந்து பாரிஸ் நோக்கி சென்று கொண்டிருந்த இந்த விமானம் அட்லாண்டிக் கடலில் மர்மமான முறையில் விபத்துக்குள்ளானது.
கிட்டத்தட்ட ஒரு வாரகால தேடுதல் வேட்டைக்குப் பின்னர் பிரேசிலிருக்கு 400 கி.மீ. தொலைவில் கடலில் விமானத்தின் சிதறிய பாகங்களும் பயணிகளின் உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
228 பேருடன் சென்ற அந்த ஏர் பஸ் ஏ 330 ரக விமானத்தின் வால் பகுதி மற்றும் சில பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதுவரை 50 உடல்களே மீட்கப்பட்டுள்ளன. இதில் 11 உடல்களே அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் 10 பேர் பிரேசிலைச் சேர்ந்தவர்கள்.
இந் நிலையில் விபத்துக்கான காரணத்தை அறிய உதவும் விமானத்தின் கருப்புப் பெட்டியைத் தேடும் பணியில் பிரேசில், பிரான்ஸ் நாட்டு கடற்படை, விமானப் படையினர் ஈடுபட்டு வந்தனர்.
இந் நிலையில் பிரான்சின் சிறிய நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று கருப்புப் பெட்டியிலிருந்து வெளியான சிக்னலை கண்டுபிடித்துள்ளது.
இதையடுத்து கருப்புப் பெட்டி இருக்கும் இடம் தெரியவந்துள்ளது. அதை மீட்டெடுக்கும் வேலையில் இப்போது இரு நாட்டு கடற்படையினரும் ஈடுபட்டுள்ளனர்.
பிரான்ஸ்சின் கடல் ஆய்வு மையமான Ifremer நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த நீர்மூழ்கி தான் டைட்டானிக் கப்பலை கண்டுபிடிக்க உதவியது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications