சிபிஎம் தலைவர்கள் மிகவும் பிடிவாதமானவர்கள், யாரையும் மதிப்பதில்லை - பரதன்
டெல்லி: ஆட்சிக்கு வந்து விட்டால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள் பிடிவாதக்காரர்களாகி விடுகிறார்கள். தன்னிஷ்டப்படிதான் செயல்படுகிறார்கள். மேற்கு வங்க நக்சலைட் விவகாரத்திற்கு முதல்வர் புத்ததேவ்தான பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியுள்ளார் சிபிஐ பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன்.
இதுகுறித்து சிஎன்என் ஐபிஎன் டிவிக்கு பரதன் அளித்துள்ள பேட்டி..
மேற்கு வங்க மாநிலத்தில் ஏதோ தனிக் கட்சி ஆட்சி நடப்பது போல மார்க்சிஸ்டுகள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அங்கு கூட்டணி ஆட்சி நடைபெறுவதாகவே அவர்கள் கருதவில்லை.
லால்கர் வன்முறைக்கு ஆதிவாசி மக்களை அரசு புறக்கணித்ததே காரணம். இதற்கு முதல்வர் புத்ததேவ்தான் பொறுப்பேற்க வேண்டும்.
யாருடைய ஆலோசனையையும் கேட்பதற்கு மார்க்சிஸ்டுகள் தயாராக இருப்பதாகவே தெரியவில்லை. என்னை எந்த விஷயத்திலும் அவர்கள் கலந்து ஆலோசிப்பதில்லை. மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி அரசின் பல்வேறு தோல்விகளுக்கு அதுவே காரணம்.
மேற்கு வங்கத்தில் மட்டுமல்லாது கேரளாவிலும் கூட ஆட்சிக்கு வந்தவுடன் தங்கள் இஷ்டப்படி, பிடிவாதப் போக்குடன் நடக்க ஆரம்பித்து விடுகிறார்கள் மார்க்சிஸ்டுகள்.
லால்கரைப் புறக்கணித்தது மேற்கு வங்க அரசு செய்த தவறு. அந்த மக்களுக்காக மேற்கு வங்க அரசு எதையும் செய்யவில்லை. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக அங்குள்ள மக்களை முன்னேற்ற அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
செய்ய முடியாத நிலையில் மேற்கு வங்க அரசு இருப்பதாக நான் கருதவில்லை. ஆனால் புறக்கணிப்பு மனோபாவத்துடன் மேற்கு வங்க அரசு இருந்து வருகிறது. முக்கியமாக பழங்குடியின மக்களின் நலனை மேற்கு வங்க அரசு கருத்தில் கொள்ளவில்லை.
இப்போதைய நிலையில் மமதா பானர்ஜியும், திரினமூல் காங்கிரஸும் எங்களது பலவீனத்தையே அவர்களது பலமாக மாற்றிக் கொள்ள முனைகிறார்கள்.
மேற்கு வங்க மாநிலத்தில் இன்று நடந்து கொண்டிருக்கும் அனைத்து நிகழ்வுகளுக்கும் புத்ததேவ்தான் பொறுப்பேற்க வேண்டும். அதற்காக அவர் பதவி விலக வேண்டுமா என்று கேட்டால் நான் பதிலளிக்க விரும்பவில்லை. அதை புத்ததேவிடம்தான் கேட்க வேண்டும். யார் முதல்வராக இருந்தாலும், இல்லாவிட்டாலும் அங்கு இடதுசாரி ஆட்சி இருக்கும் என்றார் பரதன்.
-
இனி பெட்ரோல் பங்க், சூப்பர் மார்கெட்களிலும் கூட மது கிடைக்கும்.. புதிய கலால் கொள்கை வெளியீடு -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ்












Click it and Unblock the Notifications