'எஸ்எஸ்எல்சி'-ரத்து செய்ய தமிழாசிரியர்கள் எதிர்ப்பு
காஞ்சிபுரம்: 10ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யக் கூடாது என தமிழாசிரியர் கழகம் கூறியுள்ளது.
எஸ்எஸ்எல்சி, சிபிஎஸ்சி தேர்வுகளை ரத்து செய்வது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இதற்கு பாஜக ஆளும் மாநில அரசுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், இடதுசாரிகள் ஆளும் மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிகிவித்துள்ளன. காங்கிரஸ் மாநில அரசுகள் இந்த உத்தரவை ஏற்கவுள்ளன.
இந் நிலையில் தமிழக அரசு இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
இந் நிலையில் தமிழாசிரியர் ழகத்தின் காஞ்சிபுரம் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யக் கூடாது, பொதுத் தேர்வுகளில் தமிழில் முதலிடம் பெறும் மாணவர்களுக்கு விருது வழங்க வேண்டும்,
தரம் உயர்த்தப்படும் மேல்நிலைப் பள்ளிகளில் புதிய தமிழாசிரியர்கள் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.