ஏழைகளுக்கு ரூ. 3க்கு 25 கிலோ அரிசி/கோதுமை

இதன்படி மாதந்தோறும் வறுமைக் கோட்டுக்குக் கீ்ழ் வசிக்கும் குடும்பத்தினருக்கு கிலோ ரூ. 3க்கு 25 கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்கப்படும். இதற்காக ரூ. 350 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகள் மூலமாக இவை வழங்கப்படும். இதற்காக உணவு உத்தரவாத மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வரவுள்ளது.
கல்விக் கடன் மீதான வட்டி தள்ளுபடி..
அதே போல நாடு முழுவதும் ஏழை மாணவர்களுக்கான கல்விக் கடன் மீதான வட்டி முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. வங்கிகள் தரும் இந்தக் கடன்கள் மீதான வட்டியை அந்த வங்கிகளுக்கு மத்திய அரசு மானியமாகத் தந்துவிடும். இதன்மூலம் 5 லட்சம் மாணவர்கள் பலனடைவர்.
சிறுபான்மையினருக்கு..
அதே போல சிறுபான்மையினர் நலத் திட்டங்களுக்கான நிதி உதவி ரூ. 1,740 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இது கடந்த பட்ஜெட்டோடு ஒப்பிடுகையில் 74 சதவீதம் அதிகமாகும்.
தலா ரூ. 25 கோடியில் முர்ஷிதாபாத் மற்றும் கேரள மாநிலம் மலப்புரத்தில் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகங்களின் துணை வளாகங்கள் உருவாக்கப்படவுள்ளன.
பெண் கல்வியை இரு மடங்காகக்க திட்டம்..
அதே போல 3 ஆண்டுகளில் கல்வி பயிலும் பெண்களின் எண்ணிக்கை இரு மடங்காக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக தேசிய பெண்கள் கல்வி இயக்கம் துவக்கப்படுகிறது.
இன்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்த பட்ஜெட்டில் இந்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications