கல்வி அதிகாரியை கண்டித்து ஆசிரியர்கள் போராட்டம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ஆசிரியர்களை அவமரியாதை செய்து வரும் உதவி தொடக்க கல்வி அதிகாரியை கண்டித்து ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக வெங்கடேசன் என்பவர் உதவி கல்வி அலுவலகராக பொறுப்பேற்றார்.அவர் கடந்த 3ம் தேதி நடந்த நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அப்போது கூட்டத்தில் பங்கேற்ற அவர் ஆசிரியர்களை கடுமையாக குறைகூறியும், அவமானப்படுத்தும் விதமாகவும் பேசியுள்ளார். தனது பேச்சை கேட்காதவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க போவதாகவும், யாருக்கும் ஊதிய உயர்வு கிடைக்காது என்றும் கூறி மிரட்டியுள்ளார்.
மறுநாள் நடந்த குறைதீர் கூட்டத்துக்கு சென்ற ஆசிரியர்களை அலுவலகத்தை விட்டு வெளியேற்றியுள்ளார். இதனால்கொதிப்படைந்த தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவருக்கு எதிராக போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.
இதையடுத்து நேற்று மாலை சுமார் 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மாவட்ட துவக்க கல்வி அலுவலகம் முன்பு, வெங்கடேசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி புகார் கொடுத்தனர்.












Click it and Unblock the Notifications