For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கூட்டுறவு வங்கி காவலாளி கொலை - கொள்ளையர்கள் அட்டகாசம்

By Staff
Google Oneindia Tamil News

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் உள்ள வேளாண்மை கூட்டுறவு வங்கியில் காவலாளியை கொலை செய்து விட்டு வங்கியில் இருந்த பணம் நகைகளை கொள்ளையடிக்க முயற்சி செய்த கொள்ளையர்கள் பொது மக்களை கண்டதும் தப்பிச் சென்றனர்.

பொள்ளாச்சி அருகே உள்ளது குருநள்ளி பாளையம். இங்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வங்கி செயல்பட்டு வருகின்றது.

இந்த வங்கியில் புகுந்த கொள்ளையர்கள் காவலாளியை கொலை செய்து விட்டு வங்கியில் இருந்த பணம் நகைகள் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். இதில், பலமான சத்தம் கேட்கவே பொது மக்கள் அங்கு திரண்டு வந்தனர். இதைக் கண்ட கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இச் சம்பவம் குறித்து கிணத்துகடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X