32 பேருக்கு கருணாநிதி வழங்கிய மருத்துவ, கல்வி நிதியுதவி
சென்னை: கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 32 பேருக்கு ரூ. 3.20 லட்சம் மதிப்பிலான மருத்துவ மற்றும் கல்வி நிதியுதவியை முதல்வர் கருணாநிதி இன்று வழங்கினார்.
இதுகுறித்து தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக, தலைவர் கலைஞர் தனது சொந்த பொறுப்பில் அளித்த ஐந்து கோடி ரூபாயினை வங்கியில் வைப்பு நிதியாக போடப்பட்டு, அதில் கிடைக்கப்பெறும் வட்டித்தொகையினைக்கொண்டு, மாதந் தோறும் ஏழை எளிய நலிந்தோருக்கு உதவித் தொகையாக 2005 நவம்பர் மாதம் முதல் 2007 ஜனவரி மாதம் வரை வழங்கப்பட்டு வருகிறது.
வைப்பு நிதியாக போடப்பட்ட ஐந்து கோடி ரூபாயில், 30-வது புத்தகக் கண்காட்சியினை 10.1.2007 அன்று திறந்து வைத்து தலைவர் கலைஞர் பேசுகையில், கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்-பதிப்பாளர் சங்கத்துக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவித்து அச்சங்கத்துக்கு வழங்கியது போக மீதமுள்ள நான்கு கோடி ரூபாயிலிருந்து வரும் வட்டித் தொகையில் 2007 பிப்ரவரி முதல் தொடர்ந்து உதவித் தொகை வழங்கப்படுகிறது.
2005 நவம்பர் முதல் இது வரை வழங்கிய நிதி ரூ.1 கோடியே 27 லட்சத்து 85 ஆயிரம். மேலும் 2009, ஜூன் மாதம் வட்டியாக கிடைத்த தொகையில் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக 32 பேருக்கு மொத்தம் ரூ.3,20,000/- இன்று வழங்கினார்.
நிதி பெறுவோர் வெளி மாவட்டங்களிலிருந்து வந்து போகிற செலவீனங்களைத் தவிர்ப்பதற்காக தபால் மூலம் வரைவுக் காசோலையாக அனுப்பப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.