தீவனம் இலவசமானால் மாடுகள் கலைஞரே என கத்தும்-பாமக நகைச்சுவை
சென்னை: திமுக அரசு மாட்டு தீவனங்களை இலவசமாக வழங்கினால், அம்மா என கத்துகிற மாடுகள் இனி கலைஞரே என கத்தும் என பாமக உறுப்பினர் ராமநாதன் கூறியதால் அவையே சிரிப்பலையில் குலுங்கியது.
நேற்று நடந்த சட்டசபை கூட்டத்தில் பாமக எம்எல்ஏ கே.வி ராமநாதன் பேசுகையில்,
மனிதர்களுக்கு 1 கிலோ அரிசி ரூ. 1க்கு கிடைக்கிறது. கால்நடைகளின் நிலைமை பரிதாபமாக இருக்கிறது. அவற்றுக்கான தீவனங்களின் விலை கடுமையாக உயர்ந்துவிட்டன. ஆனால், பால் கொள்முதல் விலை அதிகரிக்கப்படவில்லை.
எனவே கால்நடை தீவணங்களை இலவசமாக வழங்க வேண்டும். தமிழக அரசு அவ்வாறு செய்தால் 'அம்மா அம்மா' என கத்தும் மாடுகள் இனி 'கலைஞரே கலைஞரே' என கத்தும் என்றார். இதைக் கேட்டதும் சபையே சிரிப்பலையில் குலுங்கியது.
இதையடுத்து பதிலளித்த பால்வளத் துறை அமைச்சர் மதிவாணன், கால்நடை தீவன விலைகளை தனியார் விற்பனை விலையை விட குறைந்த விலைக்கே விற்பனை செய்து வருகிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications