For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாயாவதி-லாலு-முலாயம்: என்எஸ்ஜி பாதுகாப்பு கட்?

By Staff
Google Oneindia Tamil News

Mayawati
டெல்லி: உ.பி. முதல்வர் மாயாவதி, லாலு பிரசாத் யாதவ், முலாயம் சிங் யாதவ், ராப்ரி தேவி, முரளி மனோகர் ஜோஷி போன்ற தலைவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் என்.எஸ்.ஜி. பாதுகாப்பு விரைவில் விலக்கிக் கொள்ளப்படவுள்ளது.

இந்தப் பாதுகாப்புக்குப் பதில் பிற துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு இவர்களுக்கு தரப்படவுள்ளது.

இதுதொடர்பான வரைவுத் திட்டம் உள்துறை அமைச்சகத்திடம் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் இதுகுறித்து உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் முடிவெடுக்கவுள்ளாராம்.

தற்போது இசட் பிளஸ் ரகத்தின் கீழ் வரும் 32 விஐபிக்களில் 20 பேருக்கு என்எஸ்ஜி கமாண்டோப் படை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மற்ற 12 பேருக்கு மாநில போலீஸார், சிஆர்பிஎப், சிஐஎஸ்எப் உள்ளிட்ட படையினர் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

மாயாவதி உள்ளிட்டோர் தவிர எல்.கே.அத்வானி, நரேந்திர மோடி, உமர் அப்துல்லா, குலாம் நபி ஆசாத், பரூக் அப்துல்லா, எம்.எஸ். பிட்டா ஆகியோருக்கு தொடர்ந்து என்எஸ்ஜி பாதுகாப்பு தரப்படுமாம்.

சமீபத்தில் 400 விஐபிகளுக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு குறித்து மறு ஆய்வு செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் எக்ஸ், ஒய், இசட், இசட் பிளஸ் பாதுகாப்பு உட்பட்டவர்கள் ஆவர்.

இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்களான சிவராஜ் பாட்டீல், ராம் விலாஸ் பாஸ்வான், ஜக்மோகன் ஆகியோருக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பைக் குறைப்பது, நட்வர் சிங்குக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பை ரத்து செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டதாம்.

வருண் காந்திக்கு தொடர்ந்து ஒய் பிரிவு பாதுகாப்பு தருவது எனவும், அவரது வீட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு தருவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X