For Daily Alerts
Just In
ரூ.83 லட்சம் மோசடி-போலீஸ் பிடியில் தொழிலதிபர்!
கரூர்: கரூரில் ரூ.83 லட்சம் மோசடி தொடர்பாக தொழிலதிபரிடம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் வையாபுரிநகரைச் சேர்ந்த பழனிசாமி மகன் ஸ்ரீசரவணன் (33). இவர், அதே பகுதியில் ஒரு ஜவுளி நிறுவனம் நடத்தி வருகிறார்.
இவரிடம் இந்திய தொழில் கூட்டமைப்பு துணைத் தலைவர் டி.எஸ். விஜி என்பவர் வெளிநாட்டில் ஜவுளி ஏற்றுமதி உத்தரவு வாங்கித் தருவதாக கூறி ரூ. 83 லட்சத்து 766 பெற்றுள்ளார்.
ஆனால், கடந்த 4 ஆண்டுகளில் குறிப்பிட்ட அளவு ஏற்றுமதி உத்தரவு பெற்றுத் தரவில்லை என்று கூறப்படுகிறது.
எனவே, தன்னிடம் வாங்கிய பணத்தைப் பெற்றுத் தருமாறு கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் ஸ்ரீசரவணன் புகார் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து துணைக் காவல் கண்காணிப்பாளர் சின்னையன் தொழில் அதிபர் விஜியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments
Story first published: Thursday, July 23, 2009, 16:39 [IST]