மியான்மர் ஜனநாயக தலைவி ஆங் சான் மீதான தீர்ப்பு ஆக. 11க்கு ஒத்திவைப்பு
யாங்கோன்: மியான்மர் ஜனநாயக கட்சித் தலைவி ஆங் சான் சூகியி மீதான ராணுவ கோர்ட்டின் தீர்ப்பு ஆகஸ்ட் 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணையின் முடிவில் ஆங் சானுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் எனத் தெரிகிறது. தற்போது ஆங் சான் சூகியி வீட்டுக் காவலில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மே மாதம் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர், ஆங் சான் சூகியியின் வீடு உள்ள பகுதிக்கு அருகே உள்ள ஏரியில் நீந்திச் சென்று ஆங் சான் சூகியி வீட்டுக்குள் சென்று சந்தித்தார். இதையடுத்து ஆங் சான் மீது வீட்டுக் காவல் விதிமுறைகளை மீறி விட்டதாக வழக்கு தொடர்ந்தது மியான்மர் ராணுவ அரசு.
யாங்கோனில் உள்ள இன்செய்ன் சிறைச்சாலைக்குள் ஆங் சான் மீதான வழக்கு விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்குக்கு சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன.
ராணுவ ஆட்சியின் இந்த கண் துடைப்பு வழக்கு உடனடியாக ரத்து செய்யப்பட்டு உடனடியாக ஆங் சான் விடுதலை செய்யப்படவேண்டும் என கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தன. ஆனால் அதை மியான்மர் ராணுவ அரசு ஏற்கவில்லை.
இந்த நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது ஆகஸ்ட் 11ம் தேதிக்கு தீர்ப்பு ஒத்திவைக்கபப்ட்டு விட்டது. வழக்கை மீண்டும் மறு பரிசீலனை செய்ய நீதிபதிகள் முடிவு செய்துள்ளதால் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாம்.
ஆங் சான் சூகியி கடந்த 20 ஆண்டுகளில் 14 ஆண்டுகள் தொடர்ந்து வீட்டுக் காவலில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆங் சான் தலைமையிலான ஜனநாயக தேசிய லீக் கட்சி 1990ல் நடந்த தேர்தலில் பெரும் வெற்றி பெற்றது. ஆனால் அதை ஏற்காத தேர்தலை ரத்து செய்து ஆங் சானை வீட்டுக் காவலில் வைத்து விட்டது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications