For Daily Alerts
Just In
பாதுகாப்பு நிலவரம் - முப்படை தளபதிகள், அதிகாரிகளுடன் பிரதமர் ஆலோசனை
நாட்டில் நிலவும் தீவிரவாத அச்சுறுத்தல்கள், பாதுகாப்பு ஆயத்த நிலை குறித்து பிரதமர் கேட்டறிந்தார்.
2 மணி நேரம் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு கவுன்சிலைச் சேர்ந்த பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், முப்படைகளின் தளபதிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளியுறவுத்துறை செயலாளர் நிரூபமா ராவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்திய எல்லையில், அருணாச்சலப் பிரதேச மாநில எல்லைப் பகுதிகளில் சீனாவின் ஆக்கிரமிப்புகள், ஊடுறுவல்கள் குறித்தும் முக்கியமாக இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
மேலும் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளின் செயல்பாடுகள், அச்சுறுத்தல்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
கடலோரக் கண்காணிப்பு, பாதுகாப்பு குறித்தும் பிரதமர் ஆலோசனை மேற்கொண்டார்.
Story first published: Saturday, August 1, 2009, 16:31 [IST]