திமுகவுக்கு பிரச்சாரம் செய்ய தயார்-எஸ்.வி.சேகர்
Subscribe to Oneindia Tamil

அவர் அளித்துள்ள பேட்டியில்,
இடைத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய அழைப்பு வந்தால் அதை ஏற்று பிரச்சாரம் செய்யத் தயாராக இருக்கிறேன். என் பிரச்சாரம் அதிமுகவின் தேர்தல் புறக்கணி்ப்பையே மையமாகக் கொண்டிருக்கும்.
மேலும் மின்னணு வாக்குப் பதிவு எந்திரம் கூடாது என்று சொல்லப்படுவதை எதிர்த்தும் பிரச்சாரம் செய்வேன். தேர்தலில் தோல்வி ஏற்பட்டால் அதற்கான காரணத்தை ஆராய்வது தான் சரியே தவிர, வாக்குப் பெட்டி மீது பழி போட்டுவிட்டு தப்பிக்கக் கூடாது.
2001ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அதிமுக வென்றபோது மட்டும் மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தை ஏற்றுக் கொள்ளவில்லையா?.
அதிமுக தன்னை திருத்துக் கொள்ளாவிட்டால் இனிமேல் வெற்றி என்பதே கானல் நீராகிவிடும் என்றார் சேகர்.












Click it and Unblock the Notifications