பேசினால் தீர்க்க முடியாதது எதுவுமில்லை என்பதை நிரூபித்துள்ள சிலை திறப்பு - எதியூரப்பா
பெங்களூர் அல்சூரில் இன்று திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டு எதியூரப்பா பேசுகையில்,
இன்று எனது வாழ்வில் மிகவும் முக்கியமான நாள். நாம் அனைவரும் இந்தியரே என்பதை இந்த விழா நிரூபித்துள்ளது. மொழிகளால் வேறுபாடுகள் பாராட்டுவது தேவையற்றது என்பதை இது நிரூபித்துள்ளது.
திருவள்ளுவர் சிலையும், சென்னையில் திறக்கப்படவுள்ள சர்வக்னர் சிலையும், இரு மாநில மக்களின் இதயச் சின்னங்களாகும்.
எந்தப் பிரச்சினையையும் பேசினால் தீர்க்க முடியும் என்பதை தமிழகமும், கர்நாடகமும் நிரூபித்துள்ளன. தமிழகம், கர்நாடகம் மட்டுமல்ல, தமிழர்கள், கன்னடர்கள் மட்டுமல்ல, இந்தியா முழுமைக்கும், எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியும் என்பதை இந்த நிகழ்ச்சி நிரூபித்துள்ளது.
இரு மாநில மக்களும் அமைதியாக வாழ வேண்டும் என்பதே எனது லட்சியம்.
மொழி வேறுபாடுகள் இன்றி இரு மாநில மக்களும் தண்ணீரையும் பகிர்ந்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இந்த நிகழ்ச்சியின் மூலம் ஏற்பட்டுள்ளது என்றார் எதியூரப்பா.