லஞ்ச வழக்கு - இஎஸ்ஐ பெண் அதிகாரி எழிலரசியின் ஜாமீன் மனு தள்ளுபடி
சென்னை: ரூ. 8 லட்சம் லஞ்சம் வாங்கி கையும் களவுமாக பிடிபட்ட இ.எஸ்.ஐ இயக்குநர் எழிலரசியின் ஜாமீன் மனுவை சென்னை செஷன்ஸ் கோர்ட் தள்ளுபடி செய்து விட்டது.
கடந்த வாரம் நடந்த லஞ்ச ஒழிப்புப் போலீஸாரின் அதிரடி சோதனையில் இ.எஸ்.ஐ. இயக்குநர் எழிலரசி மற்றும் மருந்து நிறுவன ஏஜென்டுகள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
மருந்துகள் ஆர்டர் கொடுப்பது தொடர்பாக ரூ. 10 லட்சம் லஞ்சம் கேட்டிருந்தார் எழிலரசி. இறுதியில் பேரம் பேசி ரூ. எட்டரை லட்சத்திற்கு படிந்து வந்தார். அந்தப் பணத்தைக் கொடுப்பதற்காக மருந்து நிறுவன ஏஜென்டுகள் வந்தபோது போலீஸார் அவர்களை வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர்.
இதையடுத்து எழிலரசி உள்ளிட்ட 6 பேரும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
மனுவை விசாரித்த நீதிபதி தேவதாஸ், எழிலரசியின் ஜாமீன் மனுவை மட்டும் தள்ளுபடி செய்தார்.
ஏஜெண்டுகள் சுரேஷ்பாபு, சீனிவாசன், ஆராவமுதன், புருஷோத்தமன், கல்பேஷ்கர் ஆகிய 5 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications