இடைத்தேர்தல்-கொமுகவுக்கு தேவர் பேரவை ஆதரவு
கோவை: தொண்டாமுத்தூர் தொகுதி இடைத்தேர்தலில் கொங்கு முன்னேற்ற கழக வேட்பாளருக்கு ஆதரவு தருவதாக பசும்பொன் தேவர் பேரவை தெரிவித்துள்ளது.
இது குறி்தது பசும்பொன் தேவர் பேரவை தலைவர் சுப. சுப்ரமணியன் நிருபர்களிடம் கூறுகையில்,
கோயம்புத்தூர் மாவட்டத்தை மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றன. ஆனால், கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் முன்னேற்றத்தை விட, ஒட்டு மொத்தமாக கொங்கு மண்டலத்தின் முன்னேற்றத்துக்காக குரல் கொடுத்து வருவது பாராட்டதக்கது.
இதன் அடிப்படையில் தான், நாங்கள் அவர்களின் கொள்கையில் ஒருமித்துப் போகிறோம். இதுவரை ஆட்சி, அதிகாரங்களில் பங்கேற்றிருந்த அரசியல் கட்சிகள், இந்த மாவட்டத்துக்கு பெரிதாக எதையும் செய்யவில்லை.
எனவே தான், இந்த இடைத்தேர்தலில் கொமுகவை ஆதரிக்க வேண்டும் என எங்கள் இன மக்களை வலியுறுத்துவோம்.
கோவை மாவட்டத்தில் 50 ஆயிரத்துக்கும் அதிகமாக தேவர் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் கொமுகவை ஆதரிப்பார்கள் என்றார்.