சாக்கில் அடைத்து சாக்கடையில் வீசப்பட்ட பெண் சிசு!
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் சாக்குப் பையில் அடைத்து சாக்கடையில் வீசப்பட்ட பெண் சிசு மீட்கப்பட்டது.
திண்டுக்கல், ஆபிசர்ஸ் கிளப் அருகே உள்ள சாக்கடையில் கிடந்த சாக்குப் பையிலிருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டு அந்தப் பகுதியில் இருந்தவர்கள் திடுக்கிட்டு சாக்குப் பையை எடுத்துப் பிரித்துப் பார்த்தனர்.
அதில், பெண் சிசு ஒன்று அழுது கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பிறந்து சில மணி நேரங்களே ஆகியிருந்தது அந்த சிசு.
இதையடுத்து பொதுமக்கள் குழந்தையை உடனடியாக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று ஒப்படைத்தனர்.
மருத்துவர்கள் குழந்தையைப் பெற்று அதை பாதுகாப்பான அறையில் வைத்து பராமரித்து வருகின்றனர்.
தவறான காரணத்தினாலோ அல்லது பெண் சிசு வேண்டாம் என்று நினைத்தவர்களோ இப்படி சாக்குப் பையில் போட்டு குழந்தையை வீசியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications