கற்பழிப்பு வழக்கில் சிக்கிய 9 வயது சிறுவன்

Subscribe to Oneindia Tamil

இந்தோரா (இமாச்சல் பிரதேசம்): இமாச்சல் பிரதேச மாநிலம் இந்தோரா போலீஸார், 9 வயது சிறுவன் மீது கற்பழிப்பு வழக்குப் பதிவு செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாட்டிலேயே மிகக் குறைந்த வயதில் கற்பழிப்பு வழக்கில் சிக்கியுள்ள முதல் நபர் என்ற வினோதமான பெருமை இந்த சிறுவனுக்குக் கிடைத்துள்ளது.

இந்தோரா நகரில் உள்ள ஜலோரா மொஹல்லா என்ற பகுதியில், சில தினக் கூலி சிறார்கள் வசித்து வருகின்றனர். அவர்களில் இருவர் அப்பகுதியில் உள்ள 6 வயது சிறுமியின் வீட்டில் போய் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளாள். அதைப் பயன்படுத்தி 9 வயது சிறுவன் அச்சிறுமியை தனியாக வீட்டுக்குள்ளிருந்த குளியலறைக்கு அழைத்துச் சென்றுள்ளான். பின்னர் சிறுமியை பலவந்தப்படுத்தி கற்பழித்துள்ளான்.

இதை எதிர்த்து அந்த சிறுமி போராடியுள்ளாள். அப்போது சிறுமியை, அந்த சிறுவன் தாறுமாறாக அடித்துள்ளான். பின்னர் சிறுவன் அங்கிருந்து ஓடி விட்டான்.

சிறுமியின் பெற்றோர் வீடு திரும்பியபோது மகள் ரத்தத்துடன் அழுதபடி இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து என்ன என்று விசாரித்துள்ளனர். நடந்ததை சிறுமி கூறியதும் உடனடியாக போலீஸில் புகார் கொடுத்தனர்.

போலீஸார் விரைந்து வந்து சம்பந்தப்பட்ட சிறுவனைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவன் கற்பழித்ததை ஒப்புக் கொண்டான். இதையடுத்து அவனைக் கைது செய்தனர்.

சிறுவன் மீது கற்பழிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டு உனாவில் உள்ள சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு சிறுவனுக்கு சிறார் நீதிமன்றம் ஜாமீன் அளித்தது.

கற்பழிப்பு வழக்கு ஒன்றில் சிறுவன் சிக்கியிருப்பது நாட்டிலேயே இதுதான் முதல் முறை என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+