நாடாளுமன்ற குழு பதவி-ஜஸ்வந்த் தொடர்வார்
டெல்லி: நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுத் தலைவர் பதவியிலிருந்து ஜஸ்வந்த் சிங் நீக்கப்பட மாட்டார் என்று லோக்சபா சபாநாயகர் மீரா குமார் தெரிவித்துள்ளார்.
ஜின்னா குறித்து எழுதிய புத்தகத்தால் பெரும் சர்ச்சையைக் கிளப்பி விட்டுள்ளார் ஜஸ்வந்த் சிங். இந்த நூல் பாஜகவை விட்டே ஜஸ்வந்த்தை நீக்கக் காரணமாக அமைந்தது.
இந்த நிலையில் ஜஸ்வந்த் சிங் தற்போது வகித்து வரும் நாடாளுமன்றப் பொதுக் கணக்குக் குழு தலைவர் பதவியிலிருந்து ஜஸ்வந்த்தை தூக்க பாஜக முயற்சிப்பதாக தகவல்கள் வெளியானது.
ஆனால் அதுகுறித்து பாஜகவிடமிருந்து எந்தக் கடிதமும் வரவில்லை என்று சபாநாயகர் மீரா குமார் கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஜஸ்வந்த் சிங்கை நீக்கக் கோரி பாஜகவிடம் இருந்து எனக்கு இதுவரை எந்த கடிதமும் வரவில்லை. எவ்வித நெருக்குதலும் இல்லை.
நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழு தலைவர் பதவியில் ஒருவரை நியமித்த பின்னர் அவரை பதவி நீக்கக் கோரி எந்த ஒரு கட்சியும் வற்புறுத்த இயலாது.
பொதுக்கணக்கு குழு தலைவரை அப்பதவியில் இருந்து நீக்க மக்களவைத் தலைவருக்கு தனிப்பட்ட அதிகாரம் உண்டு.
பொதுக்கணக்கு குழு தலைவர் தனது பணியை ஆற்ற இயலாத நிலையில் உள்ளார் என்பதை உணர்ந்தால் அவரை மக்களவைத் தலைவர் பதவி நீக்கம் செய்யலாம். இதற்கென வரையறுக்கப்பட்ட விதிமுறைகளும் உள்ளன.
நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழு தலைவர் பதவி மக்களவை உறுப்பினராக உள்ள எதிர்க்கட்சியின் மூத்த தலைவர் ஒருவருக்கே அளிக்கப்பட வேண்டும். அவ்வாறு ஒருவரை பதவியில் அமர்த்திய பின்னர் அந்த நபரை பதவியைவிட்டு நீக்க கோருவதற்கு சம்பந்தப்பட்ட கட்சிக்குகூட அதிகாரம் கிடையாது என்றார் மீரா குமார்.
குல்கர்னிக்கு மம்தா பதவி...
இதற்கிடையே பாஜகவை விட்டு விலகி வந்த அத்வானியின் முன்னாள் ஆலோசகர் சுதீந்திர குல்கர்னி, ரயில்வே உயர்நிலைக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
குல்கர்னியே இதைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ரயில்வே உயர்நிலை ஆலோசனைக் குழுவின் முக்கியப் பொறுப்பில் என்னை ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி நியத்துள்ளார். இப் பொறுப்பை நான் கடந்த 3 வாரங்களுக்கு முன்பே ஏற்றுக் கொண்டுவிட்டேன் என்றார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications