ஏழை நர்சிங் மாணவிக்கு ஜெயலலிதா கல்வி உதவி
Subscribe to Oneindia Tamil
சென்னை: அரசு ஒதுக்கீட்டின் கீழ் பி.எஸ்.சி நர்சிங் படிப்பில் சேர இடம் கிடைத்தும் வசதியின்மை காரணமாக தவித்து வந்த விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மாணவி சத்தியாவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் உதவிக் கரம் நீட்டி நிதியுதவி அளித்துள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த சத்தியாவின் நிலை குறித்து செய்தி வெளியானதைப் பார்த்த ஜெயலலிதா, அந்த மாணவியின் படிப்புக்குரிய நான்கு ஆண்டு காலத்திற்கு ஆகும் செலவை ஏற்க முன்வந்துள்ளார். இதை மாணவி சத்தியாவுக்கும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால், சத்தியா மகிழ்ச்சி அடைந்துள்ளார். அவரும், அவரது தாயாரும் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications