அரசு திட்டத்திற்கு எதிராக புதிய தமிழகம் மும்முனை போராட்டம்
மதுரை: ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம் மெகா ஊழல் திட்டமாக மாறி வருவதை கண்டித்து புதிய தமிழகம் சார்பில் மும்முனை போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில், புதிய தமிழகம் கட்சியின் செயற்குழு கூட்டம் அக் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்..
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பயன்பெற தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம் மத்திய, மாநில அரசுகளால் கொண்டு வரப்பட்டது.
ஆனால், இந்த திட்டத்தில், நடக்கும் பல முறைகேடுகளால் இத் திட்டம் மெகா ஊழல் திட்டமாக மாறியுள்ளது. இதில், பெண்கள் தான் 90 சதவீதம் பேர் வேலை செய்கின்றனர்.
இவர்களுக்கு பல இடங்களில் ஒரு நாள் சம்பளமாக 20 முதல் 60 ரூபாய் வரை தான் கொடுக்கப்படுகின்றது. இதை கண்டித்து புதிய தமிழகம் சார்பில் மும்முனை போராட்டம் நடத்தப்படும்.
செப்டம்பர் 9 ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். அடுத்து, சென்னையில் பேரணி நடைபெறும். மூன்றாவது கட்டமாக டில்லியில் லோக்சபாவை நோக்கி பேரணி நடத்தப்படும்.
புதிய தமிழகம் 12 ம் ஆண்டு துவக்க விழா அக்டோபர் 31 ம் தேதி மதுரையில் நடத்தப்படும்.
இந்தி மொழியை அனைத்து பள்ளிகளிலும் அமல்படுத்தப்படும் என்ற மத்திய அரசின் உத்தரவை புதிய தமிழகம் கட்சி வரவேற்கிறது போன்ற பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications