மீன் வலையில் பீரங்கி குண்டு-புதுச்சேரியில் பரபரப்பு
புதுச்சேரி: புதுச்சேரி அருகே கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர் ஒருவரின் வலையில் பீரங்கி குண்டு சிக்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
புதுச்சேரி வைத்திக்குப்பம் அய்யனார் கோவில் வீதியைச் சேர்ந்தவர் மணிவண்ணன் (35). இவர் நேற்று காலை மீன் பிடிக்க கடலுக்குச் சென்றார்.
சுமார் ஒரு கடல் மைல் தூரம் சென்ற மணிவண்ணன், கடலில் வலையை வீசினார். அப்போது அவர் வலையில் அதிக எடையுடன் ஒரு பொருள் சிக்கியது.
இதையடுத்து அவர் கரைக்கு திரும்பினார். அங்கு வலையை பிரித்து பார்த்த போது மீன்களுக்கு மத்தியில் இரும்பிலான பொருள் ஒன்று கிடந்தது.
அது, கப்பலில் இருந்து உடைந்து விழுந்த பகுதியாக இருக்கலாம் என கருதிய மணிவண்ணன் அதை விற்பதற்காக இரும்பு கடைக்கு எடுத்துச் சென்றுள்ளார்.
அப்போது தான் அது பீரங்கி குண்டு என்று அவருக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவர் முத்தியால்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
உடனடியாக விரைந்து வந்த போலீசார் அந்த பீரங்கி குண்டை கைப்பற்றிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications