தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் நவ. வரை நீட்டிப்பு
சென்னை: தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயில்கள் நவம்பர் மாதம் வரைக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கோடை விடுமுறையையொட்டி கடந்த ஆகஸ்ட் மாதம் வரை சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்கி வந்தது. தற்போது சிறப்பு ரயில்களை நவம்பர் மாதம் வரைக்கும் ரயில்வே நீட்டித்துள்ளது.
தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை பெருமளவில் உயர்ந்து வருவதால் சாதாரண நாட்களிலும் கூட ரயில்களில் இடம் கிடைக்காத நிலை காணப்படுகிறது. எனவே நவம்பர் மாதம் வரை சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே நீட்டித்துள்ளது.
தொடர்ந்து பண்டிகைகள்...
இந்த மாதத்திலிருந்து தொடர்ந்து பண்டிகைகள் வரவுள்ளன. முதலில் வருகிற 21ம் தேதி ரம்ஜான் வருகிறது. 27ம் தேதி ஆயுத பூஜை வருகிறது. 28ம் தேதி விஜயதசமி. அடுத்த மாதம் 17ம் தேதி தீபாவளி வருகிறது.
தீபாவளியையொட்டிய நாட்களில் அனைத்து ரயில்களிலும் முன்பதிவு முடிந்து விட்டது. எனவே கூட்ட நெரிசலை சமாளிக்க கூடுதலாக ரயில்களை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
கடந்த ஆண்டை விட இந்த வருடம் 10 சதவிகித பயணிகள் கூடுதலாக ரயிலில் பயணம் செய்கிறார்கள். நாளுக்கு நாள் ரயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு தேவையான நேரங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
சென்னை எழும்பூரில் இருந்து வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தவிர 5 நாட்கள் தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை தினமும் நாகர்கோவிலுக்கு ஒரு சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
திங்கட்கிழமை தோறும் எண்.0639 சிறப்பு ரயில் எழும்பூரில் இருந்து மாலை 6.40 மணிக்கும், செவ்வாய்க்கிழமை தோறும் எண்.0651 ரயில் பிற்பகல் 3.40 மணிக்கும் புறப்பட்டு செல்கிறது. சென்டிரலில் இருந்து ஒவ்வொரு புதன்கிழமையும் எண்.0607 சிறப்பு ரயில் இரவு 8.05 மணிக்கு நாகர்கோவிலுக்கு புறப்பட்டு செல்கிறது. வியாழக்கிழமை தோறும் எண்.0637 எழும்பூரில் இருந்து இரவு 8.25 மணிக்கு நாகர்கோவிலுக்கு புறப்பட்டு செல்கிறது.
சனிக்கிழமை தோறும் எழும்பூரில் இருந்து இரவு 8.25 மணிக்கு செங்கோட்டை சிறப்பு ரயில் செல்கிறது. இந்த சிறப்பு ரயில்கள் அனைத்தும் நவம்பர் மாதம் வரை இயக்கப்படுகிறது. வழக்கமாக செல்லும் ரயில்களில் இடம் இல்லை என்றாலும் சிறப்பு ரயில்களில் இடவசதி உள்ளது. இதை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
இது தவிர சென்டிரலில் இருந்து திருச்செந்தூருக்கு ஏழைகள் ரதம் ரயில் வாரத்தில் ஒருமுறை இயக்கப்படுகிறது. முற்றிலும் 3 அடுக்கு ஏ.சி. படுக்கை வசதி மட்டுமே உள்ள இந்த ரயிலில் 12 பெட்டிகள் உள்ளன. இந்த ரயிலில் இட வசதி உள்ளது. இதையும் மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications