இந்தியாவில் வைட்டமின் சி' மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு

Subscribe to Oneindia Tamil

Vitamin C Molecule
டெல்லி: இந்தியாவில் கடந்த 3 மாதங்களாக வைட்டமின் சி' மாத்திரைகளுக்கு பற்றாக்குறை நிலவி வருகிறது.

கர்ப்பிணிகள், ஆஸ்துமா நோயாளிகள், ஸ்கர்வி போன்ற பல் நோய் உள்ளவர்களுக்கு வைட்டமின் சி' மாத்திரைகள் மிக அவசியம்.

இந்த மாத்திரைகள் மூலம் பெரிய அளவில் லாபம் கிடைக்காததால், இதன் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் பல மருந்து நிறுவனங்களும் இந்த மாத்திரை உற்பத்தியை நிறுத்திவிட்டன.

இந்த மருந்துக்கான விலையை மத்திய அரசு தான் நிர்ணயிக்கிறது. இதனால், இந்த மாத்திரைகள் மூலம் நிறுவனங்களுக்கு அதிக லாபம் கிடைப்பதில்லை என்று இந்திய மருந்து உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த மாத்திரைகள் தயாரிப்பதற்கான மூலப் பொருள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த இறக்குமதிக்கு கட்டுபாடுகள் அதிகமாகிவிட்டதாலும் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்தியாவில் இந்த மாத்திரை உற்பத்தியில் முன்னணியில் இருப்பவை பிரமல் ஹெல்த்கேர் மற்றும் கிளாஸ்கோ ஸ்மித்கிளைன் ஆகியவை ஆகும்.

இப்போதைய விலையில் இந்த மாத்திரைகளை தொடர்ந்து தயாரிக்க முடியாது என பிரமல் நிறுவனம் கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+