'கலெக்டர்கள்..போலீஸ்: கண்கள்..காதுகள்'!
சென்னை: அரசின் லட்சியங்கள் நிறைவேற அரசுக்கும், மக்களுக்கும் இடையே கண்களாகவும், காதுகளாகவும் கலெக்டர்களும், காவல்துறை அதிகாரிகளும் செயல்பட வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளின் இரண்டு நாள் மாநாட்டை துவக்கி வைத்து அவர் பேசுகையில்,
தமிழக கடலோரப் பகுதிகளை தீவிரமாக கண்காணித்து அகதிகள் என்ற போர்வையில் விரும்பத்தகாத சக்திகள் மாநிலத்தில் நுழையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது காவல்துறையினரின் கடமை.
சட்டம் ஒழுங்கை காப்பாற்றி மாநிலத்தின் நற்பெயரை காக்க வேண்டிய பொறுப்பும் காவல்துறைக்கு உண்டு. மாநிலத்தில் பயங்கரவாத செயல்கள் வேரூன்றாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது காவல்துறைன் முன்னுள்ள மகத்தான பணியாகும்.
இதேபோல அரசின் அனைத்து திட்டங்களும் முறையாக மக்களை சென்றடைகிறதா என்பதை கண்காணிக்கும் பொறுப்பும், கடமையும் கலெக்டர்களுக்கு உண்டு.
உணவுப் பொருட்கள் கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஆண்டு 3 லட்சத்து 48 ஆயிரம் பேருக்கு இலவச கேஸ் அடுப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றை வரும் அக்டோபர் மாதம் இறுதிக்குள் வழங்கும் பணிகளுக்கு கலெக்டர்கள் முன்னுரிமை வழங்க வேண்டும்.
அரசின் லட்சியங்கள் நிறைவேற அரசுக்கும், மக்களுக்கும் இடையே கண்களாகவும், காதுகளாகவும் கலெக்டர்களும், காவல்துறை அதிகாரிகளும் செயல்பட வேண்டும் என்றார் முதல்வர்.












Click it and Unblock the Notifications