பிரமோற்சவம்-திருப்பதியில் இன்று கருட சேவை!
Subscribe to Oneindia Tamil

கருட சேவை கண்டார்க்கு மறுபிறவி இல்லை என்பது ஐதீகம். இந்த பெருமைக்குரிய கருட சேவை, பிரமோற்சவத்தின் 5ம் நாளான இன்று நடக்கிறது.
மாலை 7 மணிக்கு சுவாமி மோகினி அலங்காரத்தில் சுவாமி வீதி உலா வருகிறார். அதை தொடர்ந்து இரவு 10 மணிக்கு கருட சேவை நடக்கிறது. இந்த நிகழ்ச்சியை காண இந்த ஆண்டு சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து பாதுகாப்பு பணிகளுக்காக கூடுதலாக 500 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நேற்று நான்காவது நாள் விழா நடக்கிறது. இதில் பெருமாள் கல்ப விருட்ச வாகனத்தில் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு இரவு 7 மணிக்கு ஊஞ்சல் சேவையும், 9 மணிக்கு சர்வ பூபால வாகனத்தில் மாட வீதிகளில் வலம் வரும் நிகழ்ச்சியும் நடந்தது.












Click it and Unblock the Notifications