மதுரைக்கும் மத்திய பல்கலைக்கழகம் வரும்- அழகிரி உறுதி
மதுரை: மதுரையிலும் மத்திய பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மத்திய ரசாயானத்துறை அமைச்சர் மு.க.அழகிரி கூறியுள்ளார்.
திருவாரூரில் சமீபத்தில் மத்திய பல்கலைக்கழகம் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிலையில் மதுரையிலும் மத்திய பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், நேற்று கியான் வாணி என்ற கல்வி எப்.எம். ரேடியோ தொடக்க விழா நடைபெற்றது.
அதில் கலந்து கொண்டு பேசிய மு.க.அழகிரி, மதுரையில் மத்திய பல்கலைக்கழகம் அமைக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அடுத்த முறை முதல்வர் கருணாநிதியை சந்திக்கும்போது எனது முதல் வேலையே இதுகுறித்து பேசுவதுதான்.
அதேபோல மதுரையில் அரசு பொறியியல் கல்லூரியை அமைக்கவும் நான் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறேன் என்றார் அழகிரி.












Click it and Unblock the Notifications