ஒசாமாவின் இருப்பிடம் குறித்து அமெரிக்காவுக்குத் தெரிந்திருக்கலாம் - பாக்.

வாஷிங்டன் வந்துள்ள அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆப்கானிஸ்தானில், போரில் ஈடுபட்டுள்ள அமெரிக்கப் படையினர் அதி நவீன சாதனங்கள், தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் ஆயுதங்களுடன் முகாமிட்டு போரிட்டு வருகின்றனர். எனவே அவர்களுக்கு நிச்சயம் பின் லேடனின் இருப்பிடம் தெரிந்திருக்கலாம்.
ஒசாமா பின் லேடன் எங்கு பதுங்கியிருக்கிறார் என்பது அமெரிக்காவுக்கு நிச்சயம் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது என்றார் குரேஷி.
ஒசாமாவும், பிற அல் கொய்தா, தலிபான் தலைவர்களும் பாகிஸ்தான் அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத பழங்குடியினர் பகுதியில் (ஆப்கானிஸ்தன் எல்லைப் பகுதியில் உள்ளவை) பதுங்கியிருப்பதாக அமெரிக்கா உறுதியாக நம்புகிறது.
இதுகுறித்து சில தினங்களுக்கு முன்பு பேசிய அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடேன் கூறுகையில், ஆப்கன் எல்லைப் பகுதியில், பாகிஸ்தானின் மேற்கு மலைப் பகுதியில்தான் தீவிரவாதம் பதுங்கியுள்ளது. அங்குதான் அல் கொய்தா உயிர் வாழ்ந்து கொகண்டிருக்கிறது. அங்குதான் பின் லேடனும் இருக்கிறார். அங்குதான் தலிபானின் மிக மோசமான தலைமையும் இருக்கிறது.
புஷ் நிர்வாகத்தின்போது, ஆப்கன் - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் அல் கொய்தாவினர் புதுப் பொலிவு பெற்றுள்ளனர். இது பெரும் கவலை அளிக்கும் விஷயமாகும் என்று கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
அதேபோல அமெரிக்க தூதரக அதிகாரியான ஜெரால்ட் பியர்ஸ்டீன் சில நாட்களுக்கு முன்பு கூறுகையில், பின் லேடன் உயிருடன்தான் உள்ளார். அவர் பாகிஸ்தானில் அடைக்கலம் புகுந்துள்ளார் என்று கூறியிருந்தார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், பின் லேடன் பாகிஸ்தானில்தான் இருக்கிறார். தலிபான்களின் கட்டளை அமைப்பு குவெட்டாவில் உள்ளது. அங்குள்ள புறநகர்ப் பகுதயிலிருந்து அவர்கள் தாக்குதல் நடவடிக்கைளை உத்தரவிடுகின்றனர் என்றார் பியர்ஸ்டீன்.
ஆனால் இதை பாகிஸ்தான் மறுத்திருந்தது. இந்த நிலையில்தான் அமெரிக்காவுக்கு பின் லேடன் இருப்பிடம் தெரிந்திருக்கலாம் என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.
பெரும் தாக்குதலுக்குத் தயாராகும் பாக்.
இதற்கிடையே தலிபான்களுக்கு எதிராக பெரும் தாக்குதலைத் தொடுக்க பாகிஸ்தான் ராணுவம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
தெற்கு வசிரிஸ்தான் பகுதியில் இந்த தாக்குதலைத் தொடுக்க அது திட்டமிட்டுள்ளது. இப்பகுதியில்தான் பின் லேடன் மறைந்திருப்பதாக நம்பப்பட்டு வருகிறது.
கடந்த பல மாதங்களாகவே தலிபான்களுடன் பாகிஸ்தான் ராணுவம் போரிட்டு வருகிறது. கிட்டத்தட்ட 29 ஆயிரம் வீரர்களை பாகிஸ்தான் இதில் ஈடுபடுத்தி வருகிறது. மேலும், தீவிரவாதிகளின் இலக்குகள் மீது விமானப்படை தாக்குதல்களும் நடத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய தாக்குதலைத் தொடுக்க பாகிஸ்தான் ராணுவம் தயாராகி விட்டதாம். இதற்கு வசதியாக தீவிரவாதிகளின் முக்கிய நிலைகள் மீதான அமெரிக்காவின் ஏவுகணைத் தாக்குதலும் அதிகரித்துள்ளது.
ஹக்கீமுல்லா மசூத்தின் தலைமையில் இயங்கி வரும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலிபான் தீவிரவாதிகளை முழுமையாக அழிக்கும் வகையில் இந்தத் தாக்குதல் இருக்குமாம்.
பாகிஸ்தானின் இந்த திடீர் முடிவுக்கு அமெரிக்காவிலிருந்து தொடர்ந்து வந்த கடும் நெருக்குதலே காரணம். தலிபான்களுக்கு எதிராக சிறு சிறு தாக்குதல் நடத்தினால் சரியாக இருக்காது. கடுமையான தாக்குதலைத் தொடுக்க வேண்டும் என அமெரிக்கா பாகிஸ்தானை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்து.
பாகிஸ்தானின் தற்போதைய திட்டம் குறித்து பென்டகன் அதிகாரிகள் கூறுகையில், பாகிஸ்தான் படையினரின் திட்டமிடல் முடிந்து விட்டது. விரைவில் பெருமளவிலான படையினர் நடவடிக்கையில் இறங்கவுள்ளனர். அதை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்றனர்.
-
திருப்பூரில் ஜவுளித்துறை அதிர்ச்சி: அமெரிக்க ஒப்பந்தத்தால் ரூ 100 கோடி காடா துணிகள் தேக்கம் -
அமெரிக்காவுக்கு முதல் பெரிய அடி.. ஈரான் நடத்திய தாக்குதலில் F-35 விமானம் சேதமடைந்ததாக தகவல்! -
அமெரிக்காவின் பிரம்மாஸ்திரம் எல்லாம் காலி! இப்படித்தான் வீழ்த்தணும்! உலகிற்கே பாடம் எடுக்கும் ஈரான் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அணு அட்டாக் நடக்கும்.. பல லட்சம் கோடி பெட்டிங்.. அணு பேரழிவு வரலாம்.. உலக சுகாதார மையம் வார்னிங் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு!












Click it and Unblock the Notifications