காதலர்களின் பதிவு திருமணங்கள்- புதிய நடைமுறை அமல்

குமரி மாவட்டம் உள்பட தென் மாவட்டங்களை சேர்ந்த காதல் ஜோடிகள் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தால் அவர்களில் பெரும்பாலானோர் போய் நிற்கின்ற இடம் கேரள மாநிலம் பாறசாலையில் உள்ள பத்திர பதிவு
அலுவலகம்தான்.
இங்கு 18 வயது பூர்த்தியான ஆண், பெண் தாங்கள் ஓன்று சேர்ந்து வாழ்க்கிறோம் என தெரிவித்து பத்திரத்தில் பதிவு செய்து பின்னர் பதிவுத் திருமணம் செய்து கொண்டதாகக் கூறி போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைவது வழக்கம்.
இந்த திருமணத்துக்கு எவ்வித சட்ட பாதுகாப்பும் இல்லை என்பது ஒருபுறம் இருந்தாலும் இதையும் ஏற்றுக் கொள்ளும் பழக்கம் இருந்து வருகிறது.
இதுபோன்ற திருமணங்களுக்கு முன்னரே நோட்டீஸ் அளிக்க வேண்டியதில்லை. 20 ரூபாய் முத்திரை தாளும், 2 சாட்சிகளும் போதும், வயதை நிரூபிக்க கூட சான்று தேவையில்லை. பதிவாளர் பார்வையில் வயது 18 கடந்தவர்கள் என்று தெரிந்தால் போதும்.
இதில் பருவ வயதை எட்டாத சிறுமிகளையும் ஏமாற்றி திருமணம் செய்கின்ற சம்பவங்கள் அதிகரித்தன. இதற்காக பாறசாலை பகுதியில் ஏஜென்டுகளும் உண்டு. அவர்கள் தாங்களே அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருவதாக கூறி ஆயிரக்கணக்கில் பணம் வசூலிக்கின்றனர்.
சட்டபூர்வமற்ற திருமணம் என்ற அறியாமலேயே பெண்கள் இதற்கு சம்மதிக்கின்றனர். மேலும் இவ்வாறு நடக்கின்ற திருமணங்களுக்கு சட்டபூர்வமாக பின்னர் விவாகரத்து பெற முடியாது. மேலும் இவர்களுக்கு பிறக்கின்ற குழந்தைகளுக்கு சட்டபூர்வமான உரி்மைகளுக்கும் தகுதியில்லாதவர்கள் ஆகிவிடுவர்.
ஆண்டுதோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திருமணங்கள் இதுபோன்ற நடந்த நிலையில் சார்பதிவாளர் அலுவலங்களில் நடைபெறுகின்ற சட்டத்திற்கு புறம்பான திருமணங்களை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள அரசுக்கு அம்மாநில ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இதனை தொடர்ந்து சார் பதிவாளர் அலுவலங்களில் முத்திரை தாளில் இருவரும் திருமணம் செய்து கொள்கிறோம் என்று எழுதி பதிவு செய்கின்ற நடைமுறை அண்மையில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications