கொத்தடிமை: கடத்தப்பட்ட 4 சிறுவர்கள் மீட்பு
தூத்துக்குடி: கொத்தடிமைகளைக வேலை செய்வற்காக அழைத்துச் செல்லப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 4 சிறுவர்கள் திருவனந்தபுரத்தில் மீட்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியை சேர்ந்த சின்னதுரை மகன் இசக்கி. உடன்குடியை சேர்ந்த செல்லப்பா மகன் செல்லத்துரை, பெரியசாமி மகன் சுடலைமுத்து, பெருமாள் மகன் ஆறுமுகம், மற்றும் ஐகோர்ட் இவர்கள் அனைவரும் 7 வயது முதல் 12 வயதுக்குட்பட்டவர்கள்.
இவர்களை பெங்களூரில் உள்ள மிட்டாய் கம்பெனி ஓன்றில் வேலைக்கு சேர்ப்பதற்காக திருச்செந்தூரை சேர்ந்த முத்துகனி என்ற பெண் ரயில் மூலம் திருவனந்தபுரம் வழியாக பெங்களூருக்கு அழைத்து சென்றார்.
திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் முத்துகனி 5 சிறுவர்களுடன் இருப்பதை பார்த்த கேரள போலீசாருக்கு சந்தேகம் வந்தது. உடனே அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் சிறுவர்களை கொத்தடிமைகளாக வேலை செய்ய முத்துகனி பெங்களூருக்கு அழைத்து செல்வது தெரிய வந்தது.
இதையடுத்து முத்துகனியை கேரள போலீசார் கைது செய்தனர். ஐந்து சிறுவர்களையும் போலீசார் மீட்டு அங்குள்ள சிறுவர் காப்பகத்தில் ஓப்படைத்தனர்.
அந்த காப்பக நிர்வாகி தூத்துக்குடி முத்துகுளியல் காப்பக நிர்வாக நொய்லினை தொடர்பு கொண்டு சிறுவர்களை மீட்டது குறித்து தகவல் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து 5 சிறுவர்களையும் தூத்துக்குடிக்கு கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் பேரில் 5 சிறுவர்களும் தூத்துக்குடி அழைத்து வரப்பட்டு முத்துகுவியல் காப்பகத்தில் ஓப்படைத்தனர்.
இது தொடர்பாக சிறுவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பெற்றோர் வந்ததும் சிறுவர்கள் அவர்களிடம் ஓப்படைக்கப்படுவார்கள் என காப்பாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications