பெண்களுடன் உல்லாசம்: ரசித்துப் பார்க்க படம் பிடித்தேன்- தேவநாதன்

தலைமறைவாக இருந்து வந்த தேவநாதன் சமீபத்தில் காஞ்சி கோர்ட்டில் சரணடைந்தார். இதையடுத்து அவரை 2 நாள் போலீஸ் காவலில் போலீஸார் எடுத்தனர்.
இதையடுத்து காவல் நிலையம் கொண்டு சென்று அவரை தீவிரமாக விசாரித்தனர்.
அப்போது தேவநாதன் கூறுகையில், காஞ்சீபுரம் ஸ்ரீமச்சேஸ்வரர் கோவிலுக்கு சாமி கும்பிட வரும் பெண்கள் தங்களது குடும்ப கஷ்டத்தைக் கூறுவார்கள். அவர்களுக்கு நான் அர்ச்சனை செய்து ஆறுதல் கூறுவேன்.
இவ்வாறு வரும் சில பெண்களுடன் எனக்கு நெருக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கோவில் கருவறையிலேயே அவர்களது சம்மதத்தோடு நான் உல்லாசமாக இருப்பேன். அந்த காட்சியை நான் என்னுடைய செல்போன் கேமராவில் ரகசியமாக படம் பிடிப்பேன். பிறகு ஓய்வாக இருக்கும் நேரத்தில் அந்த காட்சியை நானே பார்த்து, ரசித்து, இன்பமடைவேன்.
மேலும் சில பெண்களை லாட்ஜூக்கும் கூட்டிக் கொண்டு போய் உல்லாசமாக இருப்பேன். கோவில் கருவறையில் பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ எனது செல்போனில் இருந்து எப்படி பரவியது என்பது எனக்கு தெரியவில்லை.
செல்போனை ஒரு கடையில் ரிப்பேருக்கு கொடுத்தேன். அவர்கள் இந்த வீடியோ காட்சியை எனது செல்போனிலிருந்து எடுத்து பரப்பினார்களா? என்று எனக்கு புரியவில்லை என்றார் தேவநாதன்.












Click it and Unblock the Notifications