கருவறையில் காமலீலை- பெண்கள் பட்டியலை தந்தார் செக்ஸ் அர்ச்சகர்
காஞ்சிபுரம்: செக்ஸ் அர்ச்சகர் தேவநாதன் தன்னுடன் தொடர்பு வைத்திருந்த பெண்களின் பெயர் பட்டியலை போலீசாரிடம் தெரிவித்து உள்ளார்.
காஞ்சிபுரம், மச்சேஸ்வரர் கோவிலின் கருவறையில் பெண்களுடன் செக்ஸ் லீலைகள் நடத்தி வந்த அர்ச்சகர் தேவநாதன் கடந்த வாரம் கோர்ட்டில் சரண் அடைந்தார். முதலில் 2 நாள் காவலில் எடுத்து அவரை விசாரித்தபோது, உண்மைகளை ஒப்புக்கொண்டு போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.
அர்ச்சகருடன் தொடர்பு வைத்திருந்த பெண்கள் குறித்து விசாரிப்பதற்காக மேலும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு சென்னை ஐகோர்ட்டில் போலீசார் மனுத்தாக்கல் செய்தனர். 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இதையடுத்து, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அர்ச்சகர் தேவநாதனை பெரிய காஞ்சிபுரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். இன்ஸ்பெக்டர் பட்டாபிராமன் அர்ச்சகரிடம் விசாரணை நடத்தினார்.
அப்போது அர்ச்சகர் தேவநாதன் தன்னுடன் தொடர்பு வைத்திருந்த பெண்களின் பட்டியலை கொடுத்துள்ளார். அந்த பட்டியலில் உள்ள பெண்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே, காஞ்சிபுரம் இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் செல்வராஜ், செக்ஸ் அர்ச்சகர் தேவநாதன் குறித்து கோவில் நிர்வாகிகளிடம் நேற்று முன்தினம் விசாரணை நடத்தினார்.












Click it and Unblock the Notifications