For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மற்றவர் உயிருடன் விளையாடாதீர்கள்- சொல்கிறார் பொன்சேகா

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு: பாது​காப்பு குறைபாடு காரணமாக என் மீது தாக்குதல் நடந்தால், என்னுடன் வரும் பலபேர் சாகக்கூடும். மற்றவர்களின் உயி​ரு​டன் விளை​யா​டு​வது நல்​ல​தல்ல என்று இலங்கை ராணுவ முன்​னாள் தள​ப​தி​யும்,​ அதி​பர் தேர்​தல் வேட்​பா​ள​ரு​மான சரத் பொன்​சேகா கூறியுள்​ளார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் எனக்கூறி பல்லாயிரம் உயிர்களை கொன்று புதைத்த இலங்கை ராணுவத்தின் தளபதி பதவியில் இருந்து பொன்சேகா ராஜினாமா செய்ததை அடு்த்து அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைக்கப்பட்டு விட்டன.

இதனால், வருத்தம் அடைந்துள்ள பொன்சேகா, தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாகக் கூறி, முந்தைய பாதுகாப்பு ஏற்பாடுகளை தக்கவைத்துக்கொள்ள நீதிமன்றம் வரை சென்றுள்ளார்.

இதுகுறித்து கொழும்பு நகரில் நிருபர்களிடம் கூறியதாவது: இலங்கை அரசு எனது பாது​காப்​புக்காக 600 வீரர்​க​ளும்,​ 25 வாக​னங்​க​ளும் அளித்திருந்தது. ஆனால் இதை அரசு திடீ​ரென குறைத்​துள்​ளது.

தற்​போது 25 வீரர்​க​ளும்,​ 3 வாக​னங்​கள் மட்​டுமே அளிக்​கப்​பட்​டுள்​ளன. இந்த குறைந்த எண்​ணிக்​கை​யி​லான வீரர்​க​ளால் எனக்கு பாது​காப்பு அளிப்​ப​தென்​பது நடை​மு​றை​யில் சாத்​தி​ய​மில்லை.

எனக்கு பயங்​க​ர​வாத அச்​சு​றுத்​தல் உள்​ளது. ஒரு​வேளை பாது​காப்பு குறை​பாடு கார​ண​மாக என் மீது தாக்​கு​தல் நடத்​தப்​பட்​டால் அதில் நான் மட்​டும் உயி​ரி​ழக்​கப்​போ​வ​தில்லை. என்​னு​டன் வரும் நூற்​றுக்​க​ணக்​கா​னோ​ரும் இறக்க வேண்​டிய கட்​டா​யம் ஏற்​ப​டும்.

இப்​படி பிற​ரு​டைய உயி​ரு​டன் விளை​யா​டு​வது நல்​ல​தல்ல. இத​னால்​தான் எனது பாது​காப்பு விவ​கா​ரத்தை கையில் எடுத்து நீதி​மன்ற வாசல்​படி மிதித்​துள்​ளேன் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X