புதிய அணை கட்ட கேரள பட்ஜெட்டில் ரூ.10 கோடி ஒதுக்கீடு

புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுகளை நடத்த இந்த நிதி ஒதுக்கப்படுவதாக அம் மாநில நிதியமைச்சர் தாமஸ் ஐசக் கூறினார்.
பட்ஜெட்டை தாக்கல் செய்து அவர் பேசுகையில்,
பாதுகாப்பு மற்றும் கேரள மக்களின் நலன் கருதி முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவது தவிர்க்க முடியாதது. புதிய அணை கட்டியதும், அதில் இருந்தும் தமிழ்நாட்டுக்கு விவசாயத்துக்கும், குடிநீருக்கும் தண்ணீர் வழங்கப்படும்.
113 ஆண்டுகள் பழமை வாய்ந்த அணைக்குப் பதிலாக புதிய அணை கட்டுவது அவசியமாகிறது. புதிய அணை கட்டப்படும் இடம், நிலத்தின் தன்மை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆராய்வதற்கு இந்த பட்ஜெட்டில் ரூ. 10 கோடி ஒதுக்கப்படுகிறது என்றார்.
புதிய அணை கட்ட ஆய்வுகளை நடத்த கேரளாவுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஏற்கெனவே அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக உச்ச நீதிமன்ற அரசியலமைப்பு பெஞ்ச் விசாரணை நடத்தி வருகிறது. இருப்பினும் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுப் பணிக்குத் தடை ஏதும் விதிக்கப்படவில்லை.
இந் நிலையில் தான் பட்ஜெட்டில் ரூ.10 கோடியை ஒதுக்கியுள்ளது கேரளா.












Click it and Unblock the Notifications