சமாஜ்வாடி எம்.பி. அபு ஆஸ்மி உதவினார் - டெல்லி குண்டுவெடிப்பு தீவிரவாதி தகவலால் பரபரப்பு
டெல்லி: டெல்லி குண்டுவெடிப்புச் சம்பவத்திற்கு சமாஜ்வாடி கட்சி எம்.பி. அபு ஆஸ்மி உதவி செய்தார் என்று கைதாகியுள்ள இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதி ஷாசாத் கூறியுள்ளார்.
ஆனால், இதை அபு ஆஸ்மி திட்டவட்டமாக மறுத்துள்ளார். சமாஜ்வாடிக் கட்சியும் இதை மறுத்துள்ளது. ஆனால் அபு ஆஸ்மி தவிர இன்னொரு அரசியல்வாதியும் தனக்கு உதவியாக இருந்ததாக ஷாசாத் கூறியுள்ளார்.
டெல்லி குண்டுவெடிப்பு மற்றும் பட்லா ஹவுஸ் என்கெளன்டர் சம்பவங்களில் தொடர்புடையதாக கருதப்படும் ஷாசாத் தற்போது போலீஸ் காவலில் வைக்கப்பட்டு தீவிர விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
அவர் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், நான் உ.பி. மாநிலம் அஸம்கர் பகுதியில் தங்கியிருந்தபோது எனக்குத் தேவையான உதவிகளை அபு ஆஸ்மி செய்து கொடுத்தார் என்று தெரிவித்துள்ளார்.
இந்த வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அபு ஆஸ்மி இதை திட்டவட்டமாக மறுத்து விட்டதாக சமாஜ்வாடிக் கட்சி தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications