முன்னாள் தமிழக அமைச்சர் கண்டமங்கலம் வீ. சுப்பிரமணியன் மரணம்
கண்டமங்கலம்: முன்னாள் தமிழக அமைச்சர் கண்டமங்கலம் வீ. சுப்பிரமணியன் மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்தார்.
அதிமுகவை சார்ந்தவர் கண்டமங்கலம் வீ. சுப்பிரமணியன்(63). இவர், கண்டமங்கலம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் 6 முறை போட்டியிட்டு 3 முறை வெற்றி பெற்றார்.
கடந்த 2001-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று கூட்டுறவு மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார்.
தற்போது விழுப்புரம் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளராக இருந்து வந்தார். இவருக்கு நேற்று நள்ளிரவு திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் இவர் மரணம் அடைந்தார்.
மரணம் அடைந்த கண்டமங்கலம் சுப்பிரமணியன் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக சின்னக்குப்பத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
அவரது உடலுக்கு அ.தி.மு.க. கட்சி நிர்வாகிகள், ஊர் முக்கியதஸ்தர்கள் மற்றும் பல்வேறு கிராமமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
கண்டமங்கலம் சுப்பிரமணியனின் உடல் அடக்கம் இன்று மாலை 5 மணிக்கு சின்னக்குப்பம் கிராமத்தில் நடைபெற உள்ளது.
சுப்பிரமணியனுக்கு கமலம் என்ற மனைவியும், வேல்முருகன் என்ற மகனும் உள்ளனர்.












Click it and Unblock the Notifications