நித்யானந்தாவுடன் தொடர்பா?-யுவராணி மறுப்பு
நடிகை ரஞ்சிதாவைத் தொடர்ந்து நடிகை யுவராணியின் பெயர் நித்தியானந்தாவின் லீலைகளில் இணைத்துப் பேசப்படுகிறது.
யுவராணியுடனும், நித்தியானந்தா உறவு வைத்திருந்ததாக தெலுங்கு மீடியாக்களில் செய்திகள் வெளியாயின.
இந் நிலையில் இந்த செய்திகளை யுவராணி மறுத்துள்ளார். அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில்,
நித்யானந்தாவுடன் எந்த தொடர்பும் எனக்கு இல்லை. நித்யானந்தா சாமியை 45 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள். அதில் ஒருத்தியாக நானும் பார்த்தேன். என் இரு குழந்தைகளையும் அழைத்து போய்தான் சந்தித்தேன். வேறு எந்த சம்பந்தமும் இல்லை. ஒரு நடிகை என்பதால் அவதூறு என்மீது பரபரப்புகின்றனர்.
என்னைப்போல் திரையுலகில் இருந்து நிறைய பேர் நித்யானந்தாவை பார்த்துள்ளனர். அவரைப் பற்றி இப்படியெல்லாம் செய்திகள் வரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இல்லையென்றால் அவரை யாரும் பார்த்திருக்கவே மாட்டார்கள்.
எல்லோரையும் விட்டுவிட்டு என் மேல் மட்டும் வயிற்றெரிச்சலால் அவதூறு பரப்புகின்றனர்.
14 வருடமாக என் கணவருடன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.
என்னை என் குடும்பத்தினர் முழுமையாக நம்புகிறார்கள். நித்யானந்தாவுடன் சம்பந்தப்படுத்தி வந்த செய்திகளை பொருட்டாக நினைக்கவில்லை. என் மாமியாரும் என் மேல் நம்பிக்கை வைத்துள்ளார் என்று கூறியுள்ளார்.
நித்தியானந்தாவை யுவராணியுடன் இணைத்து வெளியான செய்தியை முதலில் தெலுங்கு மீடியாக்கள்தான் வெளியிட்டன. இருப்பினும் எந்த மீடியாவும் அதுகுறித்து வீடியோவை உறுதிப்படுத்தவில்லை.













Click it and Unblock the Notifications