தூத்துக்குடி துறைமுக ஏஜென்டுகள் வேலை நிறுத்தம்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடி துறைமுகத்தில் சரக்குகள் கையாளும் முகவர்கள் நாளை முதல வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

இதனால் தூத்துக்குடி துறைமுகத்தில் சரக்குகள் கையாளும் பணிகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

இது தொடர்பாக தூத்துக்குடி சுங்க இல்ல முகவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

'தூத்துக்குடியில் இரு்ந்து குஜராத்திலுள்ள முந்திரா துறைமுகத்திற்கு அரிசி கடத்துவதற்கு முயற்சி நடந்துள்ளது.
சரக்கை அனுப்பிய நிறுவனம் மக்காசோளம் என்றே ஷிப்பிங் கம்பெனிக்கு கொடுத்த ஆவணங்களில் குறிப்பிட்டிருந்தார்கள்.

அந்த சரக்கை தூத்துக்குடியி்ல் இருந்து முந்திரா துறைமுகத்திற்கு கொண்டு செல்லும் ஷிப்பிங் கம்பெனி மேலாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆனால் இந்த சம்பவத்தில் குறிப்பிட்ட சரக்கு பொட்டகத்தில் இருந்த பொருள் அரிசி என்பது ஷி்ப்பிங் கம்பெனி மேலாளருக்கு தெரியாது என்பதுதான் உண்மை நிலை.

இந்த சம்பவத்தில் ஷிப்பிங் கம்பெனி மேலாளரை கைது செய்தது ஷிப்பிங் துறையில் உள்ளவர்கள் மற்றும் சரக்கு கையாளும் முகவர்களுக்கு வேதனை அளித்துள்ளது.

எங்களது மன வருத்தததையும், கஷ்டங்களையும் பிரதிபலிக்கும் வகையில் அனைவரும் நாளை (25ம் தேதி) வியாழக்கிழமை ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என்று முடிவெடுத்துள்ளோம்' என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+