ராஜினிமா செய்ய ப.சிதம்பரம் விருப்பம்- நிராகரித்தார் பிரதமர்

தான்டேவாடா சம்பவத்தில் பலியான டெல்லியைச் சேர்ந்த சிஆர்பிஎப் ஜவான்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது.
அதில் கலந்து கொண்டு பேசிய ப.சிதம்பரம், சிஆர்.பிஎப்புக்கு நான் சல்யூட் செய்கிறேன். அரசு எப்போதும் உங்களுக்குத் துணை நிற்கும். தான்டேவாடா சம்பவத்திற்கு நானே முழுப்பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறேன். தான்டேவாடாவில் என்ன நடந்ததோ அதற்கு நானே பொறுப்பு.
இதை நான் பிரதமருக்கும் தெளிவாகத் தெரிவித்து விட்டேன். எழுத்து மூலமாகவும் கொடுத்து விட்டன்.
சிஆர்பிஎப் படை என்பது ஒரு ரிசர்வ் படை என்பதற்கும் மேலான வலிமையுடன் கூடியது. அதைக் குறைத்து மதிப்பிட முடியாது. தேர்தல், கலவரம், நக்சலைட் ஊடுறுவல், தீவிரவாத ஊடுறுவல் என அனைத்துப் பணிகளிலும் சிஆர்பிஎப் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
ஆனால் கடந்த சில நாட்களில் அந்தப் படையினர் சந்தித்த சோகமும், சேதமும் என்னைப் பெரும் வேதனையில் ஆழ்த்தி விட்டது.
இன்று தான்டேவாடாவின் நிழலில் நின்று கொண்டிருக்கிறோம் நாம். இந்த வீரத்தையும், தியாகத்தையும் ஒரு போதும் நாம் மறக்க்க் கூடாது என்றார் ப.சிதம்பரம்.
இங்கு வருவதற்கு முன்பே ப.சிதம்பரம், பிரதமருக்கும், சோனியா காந்திக்கும் கடிதங்களை அனுப்பி விட்டுத்தான் வந்ததாக தெரிகிறது. அந்தக் கடித்ததில் தான்டேவாடா சம்பவத்திற்கு தார்மீக ரீதியில் பொறுப்பேற்பதகாவும், உள்துறை அமைச்சர் பதவியிலிருந்து விலக விரும்புவதாகவும் கூறியிருந்தாராம் ப.சிதம்பரம்.
ஆனால் இந்தக் கடித்ததை பிரதமர் மன்மோகன் சிங் திட்டவட்டமாக நிராகரித்து விட்டதாக பிரதமர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டிஸ்கர் சம்பவத்திற்குப் பொறுப்பேற்று ப.சிதம்பரம் ராஜினாமா செய்ய முன்வந்துள்ளதாக வெளியான தகவலால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டு விட்டது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications