காங் பிரமுகர் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 17 பேர் கலெக்டரிடம் தஞ்சம்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் உள்ள காங்கிரஸ் பிரமுகருக்குச் சொந்தமான செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 4 குடும்பத்தை சேர்ந்த 17 பேர் தப்பி வந்து கலெக்டர் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
ஏரலில் உள்ள செங்கல் சூளையில் 4 தொழிலாளர்களும் அவர்களின் குடும்பத்தினரும் பணிபுரிந்து வந்தனர். தாங்கள் கொத்தடிமைகளாக அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறி அங்கிருந்து தப்பி வந்து கலெக்டர் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
கலெக்டர் பிரகாசை சந்தித்து தங்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய கலெக்டர் பிரகாஷ் அவர்களது உடைமைகளை மீட்டு ஓப்படைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து செங்கல் சூளையில் இருந்து தப்பி வந்த மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள குராயூரை சேர்ந்த முத்துபாண்டி கூறுகையில், நான் எனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் ஏரலில் உள்ள காங் பிரமுகர் கோவிந்தராஜன் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளையில் வேலை செய்வதற்காக வந்தோம். எங்களை சங்கரன்கோவிலை சேர்ந்த மேஸ்திரி செல்வம் என்பவர் அழைத்து வந்தார்.
அங்கு எங்களுடைய குடும்பத்தினரை போலவே எங்கள் பகுதியை சேர்ந்த நாடி முத்து, மாரி மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த முருகேசன் ஆகியோரின் குடும்பத்தினரும் இருந்தனர்.
எங்களிடம் வெற்றி பத்திரத்தில் கையெழுத்து பெற்றுக் கொண்டு கூலியும், அடிப்படை வசதிகளும் தராமல் கொத்தடிமைகளாக நடத்தி வந்தனர். உணவும் சரியாக தரவில்லை. அங்கிருந்து வெளியேற விடாமல் தடுத்து வந்தனர். நாங்கள் கோயிலுக்கு செல்வதாக கூறி தப்பி வந்து விட்டோம். அவர்களிடம் இருந்து எங்களது உடைமைகளையும் மீட்டு தர வேண்டும் என்றார். அவர்களது கோரிக்கையை ஏற்று கொண்ட கலெக்டர் பிரகாஷ் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிட்டார்.
சம்பந்தப்பட்ட செங்கல் சூளை காங்கிரஸ் பிரமுகர் ஒருவருக்குச் சொந்தமானதாகும் என்று கூறப்படுகிறது.
-
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
"FCRA சட்டத்திருத்தம் குரூரமானது.. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி" - திமுக எம்.பி வில்சன் -
திருப்பூரில் அடியோடு மாறப்போகும் பின்னலாடை நிறுவனங்கள்.. ஏற்றுமதியாளர்கள் எடுத்த அதிரடி முடிவு -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள்












Click it and Unblock the Notifications