புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தை ஜப்தி செய்ய உத்தரவு
கீரனூர்: புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தை ஜப்தி செய்ய கீரனூர் கோர்ட் உத்தரவிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கீரணூர் அருகில் உள்ள குமரமலை கிராமத்தில் 30 வருடங்களுக்கு முன்பு சரோஜினி அம்மாளுக்கு சொந்தமான் நிலத்தில் பொதுப்பணித்துறை அதிகாரிகள், சரோஜினியின் அனுமதியின்றி கழிவு நீர் கால்வாய் அமைத்ததால் நிலம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சரோஜினி கீரணூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, சரோஜினிக்கு நஷ்ட ஈடாக பொதுப்பணித்துறை 35 லட்சம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
கோர்ட் பல முறை உத்தரவிட்டும் வழங்காததால், பொதுப்பணித்துறையிடம் இருந்து பணத்தை வாங்கித்தர வேண்டும் என்று மாவட்ட கலெட்டருக்கு உத்தரவிட்டது கோர்ட்.
கலெக்டர் அலுவலகமும் வாய்தா வாய்தா என்று 6 முறை வாய்தா வாங்கிவிட்டது. இன்னமும் சரோஜினிக்கு பணம் சேர்ந்த பாடில்லை.
இந்நிலையில் நீதிமன்ற அவமதிப்பு செய்துவிட்டது என்று கலெட்டர் அலுவலகத்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டது நீதிமன்றம்.
இதையடுத்து ஜப்தி நடவடிக்கைக்காக அதிகாரிகள் விரைந்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications