சட்டிஸ்கர் - நக்சலைட்டுகள் சுட்டு 6 கிராமத்தினர் பரிதாப சாவு
Subscribe to Oneindia Tamil
ராய்ப்பூர்: மாவோயிஸ்ட் நக்சலைட்டுகள் இன்று அதிகாலையில் நடத்திய தாக்குதலில், ஆறு கிராமத்தினர் உயிரிழந்தனர்.
சட்டிஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கோவன் மாவட்டம், தேரேகான் என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
கொல்லப்பட்ட ஆறு பேரில் ஒருவர் கிராமத் தலைவர் ஆவார். ஏன் இவர்களை நக்சலைட்டுகள் சுட்டுக் கொன்றனர் என்பது தெரியவில்லை.
இவர்களின் உடல்களைக் கைப்பற்றிய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் இதே கிராமத்தில் போலீஸ் ரோந்துப் பார்ட்டியை தாக்கிய நக்சலைட்டுகள் 29 போலீஸாரை சுட்டுக் கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications