தமிழகத்தில் 15 ஊராட்சிகளுக்கு உத்தமர் காந்தி விருது
சென்னை: சிறந்த முறையில் செயல்பட்ட 15 தமிழக ஊராட்சிகளுக்கு உத்தமர் காந்தி விருது அளிக்கப்பட்டுள்ளது.
கிராமங்களின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கான ஊராட்சியால் மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் அங்கீகரிக்கும் வகையில் உத்தமர் காந்தி விருது வழங்கப்பட்டு வருகிறது. இதில் தேர்ச்சி பெறும் ஊராட்சிக்கு ஒரு கேடயமும், ஐந்து லட்ச ரூபாய் ரொக்கமும் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் ஊராட்சித்தலைவர்களுக்கு நற்சான்றிதழும், பதக்கமும் வழங்கப்படும். 2008 - 09 ம் ஆண்டிற்கான விருதுக்கு 226 ஊராட்சிகள் முன் மொழிவு செய்யப்பட்டிருந்தது.
இதில் சேலம் மாவட்டம் கோட்ட வரதம்பட்டி, தூத்துக்குடியில் திருப்பணிச்செட்டிகுளம், விருதுநகரில் வச்சகாரப்பட்டி, நாமக்கல்லில் ரெட்டிப்பட்டி, கன்னியாகுமரியில் பேச்சிப்பாறை, ஈரோடு பொம்மநாயக்கன் பாளையம், கடலூர் ஒரத்தூர், கோவை குன்னத்தூர், விழுப்புரம் சோ.குப்பம், நீலகிரி பேரட்டி, திருவாரூர் மேலப்பெருமழை, பெரம்பலூர் அத்தியூர், ராமநாதபுரத்தில் பரமக்குடி ஒன்றியம் அரியனேந்தல், திண்டுக்கல்லில் ஆத்தூர் ஒன்றியம் கலிக்கம்பட்டி, கிருஷ்ணகிரி பூனப்பள்ளி ஆகிய 15 ஊராட்சிகள் உத்தமர் காந்தி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications