நெல்லையில் புத்தர் சிலை அகற்றம்-கோவில் தகர்ப்பு

பாளையங்கோட்டை என்ஜிஓ காலனி அருகேயுள்ள திருமால் நகரில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் புத்தர் விகார் டிரஸ்ட் என்ற பெயரில் சிலர் தியான பீடம் கட்டியிருந்தனர்.
பீடத்தின் முன்பு புத்தர் சிலை ஓன்றும் அமைக்கப்பட்டிருந்தது. சுற்றி கம்பி வேலியும் அமைத்திருந்தனர். இதற்கு யாருடைய அனுமதியையும் அவர்கள் பெறவில்லை. இந்நிலையில் புத்தர் சிலை மற்றும் தியான பீடத்தை அகற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
அதன்படி இன்று ஆர்டிஓ தமிழ்செல்வி, பாளையங்கோட்டை தாசில்தார் சங்கரசுப்பிரமணியன், மற்றும் உதவி போலீஸ் கமிஷனர் ராமசந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
புல்டோசர் மூலம் டிரஸ்ட் அலுவலகம், தியான பீடம் மற்றும் கம்பி வேலிகள் இடித்து அகற்றப்பட்டன. புத்தர் சிலையை எடுத்து நெல்லை அருட்காட்சியகத்திற்கு கொண்டு சென்றனர்.
இந்த புத்தர் கடந்த 2004 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 6 ஆண்டு காலமாக அங்கு வழிபாடும் நடந்து வருகிறது. இந்த நிலையில் கோவிலை இடித்து விட்டு புத்தர் சிலையை அதிகாரிகள் தூக்கிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications