For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு பாதுகாப்புக்கு கேமரா பொருத்தப்பட்ட ராட்சத பலூன்

Google Oneindia Tamil News

கோவை: கோவை மாநாட்டின் பாதுகாப்பு பணிகளில் ஒன்றாக அதிநவீன கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட ராட்சத பலூன் நேற்று பறக்கவிடப்பட்டது. ஊர்வல பாதையில் வெடிகுண்டு சோதனையும் நடத்தப்பட்டது.

கோவையில் நடைபெறுகிற உலக தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் பாதுகாப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கிறது. மாநாடு நடைபெறும் வளாகத்தைச் சுற்றி துப்பாக்கி ஏந்திய போலிசார் ரோந்து பணியில் ஈடிபட்டுளள்னர்.

மாநாடு நடைபெறும் பகுதிகளில் வெடிகுண்டு நிபுணர்களும் துப்பறியும் நாய் பிரிவினரும் சோதனை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். முக்கிய பிரமுகர்கள் அமரும் இருக்கைகள் வெடிகுண்டு நிபுணர்களால் சோதனை செய்யப்பட்டது.

கண்காணிப்பு பணிகளுக்காக அதிநவீன கேமரா பொருத்தப்பட்ட ராட்சத பலூனும், குட்டி விமானமும் பறக்கவிடப்பட்டுளளது.

ராட்சத பலூனில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள 4 கேமராக்கள் உள்ளன. இந்த கேமராக்கள் நாலாபுறமும் படம்பிடிக்கும். ஆயிரம் அடி உயரத்தில் பறந்தாலும் கீழே 4 கிலோ மீட்டர் தொலைவில் நடக்கும் சிறு அசைவுகளையும் கூட துல்லியமாக படம்பிடிக்கும். இந்த வகை கேமராக்கள் இந்தியாவிலேயே இந்த மாநாட்டில் தான் முதன்முதலாக பயன்படுத்தப்படுகிறது என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல் குட்டி விமானத்தில் பொருத்தப்பட்டுள்ள 2 கேமராக்கள் மாநாட்டு பந்தல் மற்றும் கொடிசியா வளாகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் 15 கிலோ மீட்டர் சுற்றலவிள் உள்ள உயரமான பகுதிகளை இது கண்காணிக்கும். இந்த பணியை சென்னையில் இருந்து வரும் மாநில பாதுகாப்பு பிரிவினர் மேற்கொள்கின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X