செம்மொழி மாநாடு-கோவை சென்றார் கருணாநிதி-உற்சாக வரவேற்பு
Subscribe to Oneindia Tamil

கோவையில் நாளை மறு நாள் பிரமாண்டமான பேரணியுடன் தொடங்குகிறது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு. இதற்காக முதல்வர் கருணாநிதி இன்றே கோவை சென்று விட்டார். இன்றுமுற்பகல் சென்னையிலிருந்து விமானம் மூலம் அவர் கோவை புறப்பட்டுச் சென்றார்.
கோவை விமான நிலையத்தை வந்தடைந்த அவருக்கு மேள தாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பெரும் திரளான திமுகவினர் திரண்டு வந்து முதல்வரை வரவேற்றனர்.
வரவேற்புக்குப் பின்னர் முதல்வர் கருணாநிதி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
ஓய்வுக்குப் பின்னர் மாநாட்டு ஏற்பாடுகளை நேரில் சென்று பார்வையிடவுள்ளார் முதல்வர்.












Click it and Unblock the Notifications