கோவை வந்தார் பிரதீபா பாட்டீல்-ஆளுநர், முதல்வர் வரவேற்பு
கோவை: உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டைத் தொடங்கி வைப்பதற்காக நேற்று இரவு வருகை தந்த குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
உலகத் தமிழ் செம்மொழி மாநாடு இன்று தொடங்குகிறது. இதை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தொடங்கி வைக்கிறார். இதற்காக அவர் நேற்றே கோவை வந்து சேர்ந்தார்.
நேற்று இரவு விமானப்படை விமானம் மூலம் கோவை வந்தார் பிரதீபா பாட்டீல். அவரை விமான நிலையத்தில் ஆளுநர் பர்னாலா, முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் மு.க.அழகிரி, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
பின்னர் விருந்தினர் மாளிகைக்கு ஓய்வெடுக்கச் சென்றார் பிரதீபா பாட்டீல். இன்றுகாலை செம்மொழி மாநாட்டை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார் பிரதீபா பாட்டீல்.
பின்னர் மாலையில் நடைபெறும் இனியவை நாற்பது பேரணியைப் பார்வையிடுகிறார். அதன் பின்னர் அவர் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.












Click it and Unblock the Notifications