For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை-கால்வாயில் மூழ்கி 2 வயது குழந்தை பலி

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் கால்வாயில் மூழ்கி 2 வயதுக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

சென்னை எம்.ஜி.ஆர்.நகர் சூளை பள்ளம் நாவலர் காலனியைச் சேர்ந்தவர் வடிவேல். லாரி டிரைவராக இருக்கும் இவரது மனைவி வரலட்சுமி. இவர்களுக்கு ஷர்மிளி (2) உள்பட இரண்டு குழந்தைகள் உள்ளன.

கழிவு நீர்க் கால்வாயை ஒட்டி வடிவேலின் வீடு உள்ளது. நேற்று முன்தினம் இரவு ஷ்ர்மிளி அருகில் உள்ள ஆட்டோவில் ஏறி விளையாடிக் கொண்டிருந்தாள். வடிவேலி டிவி பார்த்துக் கொண்டிருந்தார், தாயார் வரலட்சுமி சமைத்துக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் சிறுமி ஷர்மிளி கால்வாயில் விழுந்து விட்டாள்.இதை யாரும் பார்க்கவில்லை. சிறிது நேரம் கழித்து குழந்தையைக் காணாமல்அங்குமிங்கும் தேடியுள்ளனர். குழந்தை காணாமல் தவித்த தாயும்,தந்தையும் போலீஸில் புகார் கொடுத்தனர். அப்போது அவர்களுக்கு குழந்தை கால்வாயில் விழுந்திருக்கலாம் என சந்தேகம் வந்து போலீஸிடம் கூற, தீயணைப்புப் படையினர் விரைந்து வந்தனர்.

50 தீயணைப்புப் படையினர் கால்வாயில் இறங்கி தீவிரமாக தேடினர். இரவு முழுவதும் தேடியதில் குழந்தை கிடைக்கவில்லை. இந்த நிலையில் இன்று காலை ஷர்மிளியின் உடல் கால்வாயில் ஒதுங்கியது.

இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கழிவு நீர்க் கால்வாயில் விழுந்து குழந்தை பலியான சம்பவம் அப்பகுதி மக்களை வேதனையில் ஆழ்த்தியது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X